முதல் இன்னிங்ஸில் இந்தியா 405 ஓட்டங்கள்! - சச்சின் 98 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் மொஹாலியில் நடைபெற்று வரும் அஸ்திரேலியா - இந்திய டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 428 ஓட்டங்களை எடுத்துள்ளது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 110 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. ட்ராவிட் - ஷர்மா ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று ட்ராவிட் தனது அரைச்சதத்தை பூர்த்தி செய்து 77 ஓட்டங்களை எடுத்தார். ஷர்மா 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய டெண்டுல்கர் 98 ஓட்டங்களை எடுத்த போது எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார். சுரேஷ் ரைனா 86 ஓட்டங்களை எடுத்தார்.
இறுதியில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 405 ஓட்டங்களை இந்திய அணி எடுத்தது.
பந்துவீச்சில் ஜோன்சன் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
நாளை நான்காவது நாள் ஆட்டத்தில், அஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடவிருக்கிறது.
ராணி கோப்பை போட்டியில் முன்னிலை வகிக்கும் ரெஸ்ட் ஆப் இந்தியா
இதேவேளை, ராஜஸ்த்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இராணி கோப்பைக்கான டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைந்துள்ளது.
நடப்பு இரானி கோப்பை சாம்பியனான ரெஸ்ட் ஆப் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 45 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
முதல் இன்னிங்ஸில் ரெஸ்ட் ஆப் இந்தியா சகல விக்கெட்டுக்களையும் இழந்து 668 ஓட்டங்களை எடுத்தது. அபினவ் முகுந்த் 161 ஓட்டங்களை எடுக்க, பட்டேல் 125 ஓட்டங்களை எடுத்தார்.
பதிலுக்கு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த மும்பை அணி 274 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ஜபர் 71 ஓட்டங்களை எடுத்தார்.