இந்திய அணி ஆஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 428 குவித்தது.
இந்திய அணி முதல் இன்னிங்சில் 405 ரன் எடுத்தது. நேற்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 23 ரன்களை முன்னிலையில் ஆஸ்திரேலியா விளையாடியது. அந்த அணி 192 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்று 4 விக்கெட் இழப்பிற்க்கு 55 ரன் சேர்த்தது. சச்சின் 10 ரன்னுடனும் ஜாகீர்கான் 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 5 -வது நாள் தொடங்கியது. சச்சினும் ஜாகீர்கானும் களம் வந்தனர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஜாகீர்கான் 10 ரன் எடுத்து அவுட் ஆனார். அதை தொடர்ந்து சச்சினுன் 38 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து வந்த இந்திய வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை டோனி 2 ரன்னும் ஹர்பஜன்சிங் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
பின்னர் களம் வந்த இஷாந்த்சர்மாவும், லட்சுமணனும் நிதானமாக விளையாடி வந்தனர். மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது.
லட்சுமணன் -இஷாந்த் சர்மா ஜோடி சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழி வகுத்தது. இஷாந்த் சர்மா அவுட் ஆனார். ஆனால் லட்சுமணம் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.