இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திருமலை சீனிவாசன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் திருமலை சீனிவாசன். சென்னையை சேர்ந்த 60 வயதான திருமலை சீனிவாசன் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை மரணம் அடைந்தார்.
திருமலை சீனிவாசன் 1980-81-ம் ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடினார். 1970 முதல் 1984-ம் ஆண்டு வரை 45 ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி உள்ளார்.
திருமலை சீனிவாசன் மறைவுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் என்.சீனிவாசன் அனுதாபம் தெரிவித்துள்ளார்.