இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது.ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 428 குவித்தது. வாட்சன் சதம் (126 ரன்) அடித்தார். ஜாகீர்கான் 5 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 405 ரன் குவித்தது. தெண்டுல்கர் 98 ரன்னும், ரெய்னா 80 ரன்னும், டிராவிட் 77 ரன்னும் எடுத்தனர். ஜான்சன் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 23 ரன்களை முன்னிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது.
இஷாந்த் சர்மாவின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா திணறியது.
90 ரன்னில் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. வாட்சன் 56 ரன்னிலும், பாண்டிங் 4 ரன்னிலும், கிளார்க் 4 ரன்னிலும் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டம் இழந்தனர்.
மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 100 ரன் எடுத்து இருந்தது. மதிய உணவு இடைவேலைக்கு பிறகு இருவரும் விளையாடினார்கள் சிறிது நேரத்தில் காடிச் 37 எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணி 192 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
116 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷேவாக் காம்பீர் களம் இறங்கினர். ஹில்பென்ஹாஸ் வீசிய முதல் ஓவரில் காம்பீர் எள்.பி.டபிள்யூ ஆகி அவுட் ஆனார். அடுத்து வந்த டிராவிட் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டார். அதற்கு பலன் கிடைக்க வில்லை அவர் 10 ரன் எடுத்து அவுட் ஆனார்.
அதை தொடர்ந்து ஷேவாக்கும் 17 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரெய்னா ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். பின்னர் களம் இறங்கிய சச்சின் பொறுப்புடன் விளையாடி வந்தார். மறுமுனையில் ஜாகீர்கானும் நிதானமாக விளையாடினார். 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்க்கு 55 ரன் எடுத்தது. சச்சின் 10 ரன்னுடனும் ஜாகீர்கான் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.