2010 ற்கான ஐசிசி விருது வழங்கும் நிகழ்ச்சி பெங்களூரில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்வை ஐசிசியும், சர்வதேச கிரிக்கெட் சங்கமும் (FICA) இணைந்து நடத்தியிருந்தன. இந்த ஆண்டின் சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் தெரிவானார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதும், இந்திய அணிக்கு தான். அதிரடி வீரர் ஷேவாக்கு கிடைத்தது.
20டுவெண்டி போட்டிகளில் சிறந்த ஆட்டக்காரராக நியூசிலாந்தின் மெக்கலமும், ஒரு நாள் சிறந்த வீரராக தென்னாபிரிக்காவின் டிவில்லியர்ஸும் தெரிவானார்கள். சிறந்த புதுமுக வீரராக இங்கிலாந்தின் ஸ்டீவன் பின் தெரிவானார்.
முன்னாள் மேற்கிந்திய பந்துவீச்சாளர் கொட்னி வால்ஸ் பிரதம அதிதியாக செங்கம்பள வரவேற்பின் மூலம் வரவேற்கப்பட்டார். சிறந்த போட்டி நடுவராக பாகிஸ்தானை சேர்ந்த அலீம் டார் போஸெஸ் தெரிவானார்.
இந்நிகழ்வில் ஐசிசி தலைவர் ஷரத் பவர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இவற்றை விட சுவாரஷ்யமானது இறுதியாக அறிவிக்கப்பட்ட ஐசிசி உலக அணியாகும்! ஆசிய அணியுடன் ஐசிசி அணிக்கு போட்டி நடைபெறுமாயின் இவ் அணியே விளையாடும். (அல்லது வேற்றுக்கிரகமொன்றில் இருக்கும் உயிரினங்களுக்கு கிரிக்கெட் விளையாட தெரியுமெனில் பூமியிலிருந்து அனுப்பப்படும் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் அணி, இதாகத்தான் இருக்கும்.)Wink
ஐசிசியின் உலக டெஸ்ட் அணிக்கு கேப்டனாக தோனி அறிவிக்கப்பட்டார். இந்த அணியில் சங்ககார, ஸ்வான், தெண்டுல்கர், அம்லா, போலிங்கர், காலிஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஐசிசியின் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரிக்கி பாண்டிங் தெரிவாகியுள்ளார். இந்த அணியில் வாட்சன், டெண்டுல்கர், ஹஸி, தோனி, போலிங்கர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருக்கின்றனர்.
இன்று நடைபெற்ற ஐசிசி விருது வழங்கும் விழாவின் புகைப்படங்கள் சில, உங்கள் பார்வைக்கு